காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை மிக விரைவில் சந்திக்கபோறாராம் ஐனாதிபதி..!

ஆசிரியர் - Editor I
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை மிக விரைவில் சந்திக்கபோறாராம் ஐனாதிபதி..!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை மிக விரைவில் ஐனாதிபதி சந்திப்பார். என வெளியுறவு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) அட்மிரல் ஜெயநாத் கொலம்பேஜ் கூறியுள்ளார்.

வியாழக்கிழமை இந்திய ஊடகமான த இந்துவுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது,

இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்து அந்த குடும்பங்களுக்கு ஒரு தீர்வைக் கொடுப்பதற்கும் ஜனாதிபதி உண்மையிலேயே உறுதியாக உள்ளார்.

இது காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் முதல் பயணமாகும்.  அவர் [ஜனாதிபதி] அரசியல்வாதிகள் சொல்வதைக் காட்டிலும், 

குடும்பத்தினரிடம் அவர்கள் சொல்வதைக் கேட்கவும், அவர்களின் உண்மையான குறைகளை அடையாளம் காணவும், அவர்களுக்கு ஒரு தீர்வைக் கொடுக்கவும் விரும்புகிறார். 

 இது மிக விரைவில் நடக்கும், என கொலம்பேஜ் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு