யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலை மருத்துவர் உள்ளிட்ட இருவருக்கு இன்று கொரோனா தொற்று..! மற்றயவர் பளை பிரதேசத்தை சேர்ந்தவர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலை மருத்துவர் உள்ளிட்ட இருவருக்கு இன்று கொரோனா தொற்று..! மற்றயவர் பளை பிரதேசத்தை சேர்ந்தவர்..

யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலை மருத்துவர் உள்ளிட்ட 2 பேருக்கு வடமாகாணத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 451 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அவர்களில் 2 பேர் வடமாகாணத்ததை சேர்ந்தவர்கள் எனவும், 

அதில் ஒருவர் தெல்லிப்பழை வைத்தியசாலை மருத்துவர். அவர் சிகிச்சை வழங்கிய நோயாளி ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் 

கொரோனா தொற்று உள்ளமை கண்டறிப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் மருத்துவரிடம் மாதிரிகள் பெறப்பட்ட பீ.சிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டபோது 

அவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் பளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளார். 

அவர் மிருசுவில் தொற்றாளர் பங்கேற்ற தேவாலயம் கூட்டம் ஒன்றில் பங்கேற்றிருந்தார் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு