யாழ்.போதனா வைத்தியசாலையில் சிற்றூழியர் மற்றும் சிறை கைதிகள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிற்றூழியர் மற்றும் சிறை கைதிகள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்.சிறைச்சாலை கைதிகள் 4 பேருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 431 பேருக்கு இன்றைய தினம் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் யாழ்.மாவட்டத்தில் 5 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேருக்கும் 

வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் முல்லைத்தீவு - மல்லாவி பகுதியில் மரண சடங்கில் கலந்து கொண்டிருந்தவர்களுக்கு தொற்று உறுதியான அயலில் 2 பேருக்கு தொற்று உறுதி,

வவுனியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த ஒருவருக்கே தொற்று உறுதியாகியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு