சுகாதார பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு..! வடக்கு வைத்தியசாலைகளில் இயல்புநிலை பாதிப்பு..

ஆசிரியர் - Editor I
சுகாதார பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு..! வடக்கு வைத்தியசாலைகளில் இயல்புநிலை பாதிப்பு..

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்திவரும் நிலையில் வடக்கு வைத்தியசாலைகளில் இயல்புநிலை பாதிக்கப்பட்டிருந்ததை காணகூடியதாக இருந்தது. 

வெளிநோயாளர் பிரிவு, மாதாந்த சிகிச்சை போன்ற செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டிருந்ததுடன், நோயாளர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதையும் அவதானிக்க முடிந்திருக்கின்றது. 

நீண்ட தூரங்களிலிருந்து சிகிச்சைக்காக வந்து நீண்டநேரம் காத்திருப்பதையும் சிலர் சிகிச்சை பெறாது திரும்பி சென்றதையும் அவதானிக்க முடிந்ததுடன், 

சுகாதார பணியாளர்களில் சிலர் சீருடை அணியாது மனிதாபிமானமுறையில் சேவையில் ஈடுபட்டிருந்ததையும் அவதானிக்க முடிகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு