யாழ்.பல்கலைகழக 35வது பட்டமளிப்பு விழா..! சிறப்புற ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக 35வது பட்டமளிப்பு விழா..! சிறப்புற ஆரம்பம்..

யாழ்.பல்கலைகழகத்தின் 35வது பட்டமளிப்பு விழா இன்று ஆரம்பமாகியுள்ளது. இன்றும் நாளையும் 6 அமர்வுகளாக இந்த பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. 

முதலாவதுஅமர்வில் யாழ்.பல்கலைக்கழக வேந்தர் தகைசார் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமை தாங்கிபட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும் வழங்கினார். 

பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, வவுனியா வளாக முதல்வர் கலாநிதி ரி. மங்களேஸ்வரன், பதிவாளர் வி. காண்டீபன், 

நிதியாளர் எஸ். சுரேஷ்குமார், நூலகர் சி. கல்பனா மற்றும் பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உட்படபலர் கலந்து கொண்டனர்.

கொவிட் 19 நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன்இந்தப் பட்டமளிப்பு விழா இடம்பெற்றமை குறிபிபிடத்தக்கதாகும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு