காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடைய போராட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறதா..? துருவ ஆரம்பிக்கிறது TID..

ஆசிரியர் - Editor I
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடைய போராட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறதா..? துருவ ஆரம்பிக்கிறது TID..

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்களில் வெளிநாட்டு கொடிகள் பிடிக்கப்படுவது ஏன்? குறித்த போராட்டங்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறதா? என வவுனியாவில் கடந்த 1465 நாட்களாக போராட்டம் நடத்திவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பின் தலைவர், செயலாளாடம் TID விசாரணை நடத்தியுள்ளது. 

இந்த விசாரணை இன்றைய தினம் போராட்டம் நடைபெறும் இடத்திலேயே இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. குறித்த விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த அமைப்பின் செயலாளர் ராஜ்குமார் பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவை சேர்ந்த இரண்டு உத்தியோகத்தர்கள் இன்று என்னிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். 

நாம் மேற்கொண்டு வரும் போராட்டம் தொடர்பாக அவர்கள் கேட்டறிந்தனர். கடந்த டிசம்பர் மாதம் 10ம் திகதி அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய கொடிகளுடன் வவுனியா நகரசபை மண்டபத்தில் இருந்து நடைப்பயணமாக வந்தீர்களா என கேட்டிருந்தனர். பலவருடங்களாக போராடிவரும் நிலையில் எமக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை. 

இந்நிலையில் இலங்கை அரசுமீது நம்பிக்கை இழந்துள்ள நாம். எமக்கான நீதியை பெறுவதற்கு சர்வதேசத்தின் உதவியைநாடியுள்ளதாக அவர்களிடம் தெரிவித்திருந்தேன். போராட்டங்களிற்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருகின்றதா என அவர்கள் கேட்டிருந்தனர். நாங்கள் நீதியை மாத்திரமே எதிர்பார்த்து நிற்கின்றோம் நிதியை அல்ல 

என்ற விடயத்தினை அவர்களிற்கு உறுதியாக கூறியிருந்தேன். அமெரிக்க தூதுவர் நாளைய தினம் யாழ்பாணம் வரவுள்ள நிலையில் குறித்த விசாரணை முன்னெடுக்கப்படுகின்றமை சந்தேகத்தை ஏற்ப்படுத்துவதாக தெரிவித்த அவர் அரசு இவ்வாறான அச்சுறுத்தல்களை முன்னெடுத்தாலும் எமது உறவுகளிற்கான போராட்டங்களில் இருந்து 

நாங்கள் பின்வாங்கப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார். அவரைத்தொடர்ந்து சங்கத்தின் தலைவி க.ஜெயவனிதாவிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு