பேராசிரியர் அ.துரைராஜா ஞாபகார்த்த தங்க பதக்கம் வழங்குவதற்கான தொிவில் இழுபறி..! இம்முறை பட்டமளிப்பில் அந்த தங்க பதக்கம் வழங்கப்படாது..

ஆசிரியர் - Editor I
பேராசிரியர் அ.துரைராஜா ஞாபகார்த்த தங்க பதக்கம் வழங்குவதற்கான தொிவில் இழுபறி..! இம்முறை பட்டமளிப்பில் அந்த தங்க பதக்கம் வழங்கப்படாது..

யாழ்.பல்கலைகழகத்தின் பொது பட்டமளிப்பு விழாவில் சகல துறைகளிலும் சிறந்து விளங்கும் பல்கலைகழக மாணவன் ஒருவனுக்கு வழங்கப்படும் பேராசிரியர் அ.துரைராஜா ஞாபகார்த்த தங்க பதக்கத்தை வழங்குவதில் இம்முறை இழுபறி ஏற்பட்டிருக்கின்றது. 

இதனால் குறித்த ஞாபகார்த்த தங்க பதக்கத்தை வழங்குவது இம்முறை பட்டமளிப்பு விழாவில் நிறுத்தப்பட்டிருப்பதாக யாழ்.பல்கலைகழக துணைவேந்தரின் ஊடக பிரிவு தகவல்கள் தொிவித்திருக்கின்றன. 

முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்தமாக பீடமட்டத்திலும், பல்கலைக்கழக மட்டத்திலும், கல்வி, விளையாட்டு, கலை, கலாசாரம் உட்பட சகலதுறைகளிலும் சிறந்த மாணவன் ஒருவருக்குத் தங்கப் பதக்கம் வழங்கப்படுவது வழமையாகும். 

இம்முறை கலைப் பீட மட்டத்தில் சகல துறைகளிலும் சிறந்த மாணவனுக்கான பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கம் பல்கலைக்கழக மட்டத்தில் சகல துறைகளிலும் சிறந்தமாணவனுக்கான பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த 

தங்கப் பதக்கம் ஆகிய விருதுகளுக்காக கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் ஊடகத் துறையைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கு சிறந்த மாணவனுக்கான பல்கலைக்கழக மட்ட விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்பின் மெய்யியல் துறை மாணவன் ஒருவரிடம் இருந்து துணைவேந்தருக்குக் கிடைத்த மேன்முறையீட்டின் அடிப்படையிலும் ஆதாரங்களின் அடிப்படையிலும் விசேட மூதவைக் கூட்டம் கூட்டப்பட்டு மெய்யியல் துறை மாணவன் விருதுக்கு உரியவராக அறிவிக்கப்பட்டார். 

எனினும் மெய்யியல் துறை மாணவனுக்கு எதிராக மாணவர் தரப்பில் இருந்து மேன்முறையீடுகளும் ஆதாரங்களும் புதிய சாட்சியங்களும் கிடைத்த வண்ணம் இருப்பதனால் விருதுக்குரியவரைத்தெரிவு செய்வதற்குக் 

கால அவகாசம் போதாமையனால் விருது வழங்கல் இடைநிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய விசாரணைகள் இடம்பெற்று பிறிதொரு விழாவில் இந்த விருது வழங்கப்படும் என்று மேலும்தெரிவிக்கப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு