தற்கொலை தாக்குதலுக்கு தயாரான 15 பெண்கள்..! விசாரணையில் அதிர்ச்சி..

ஆசிரியர் - Editor I
தற்கொலை தாக்குதலுக்கு தயாரான 15 பெண்கள்..! விசாரணையில் அதிர்ச்சி..

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுக்கு தலைமை தாங்கிய சஹரான் ஹாசிமிடம் தற்கொலை தாக்குதலை நடத்துவதற்கான உறுதி மொழியை மேலும் 15 பெண்கள் பெற்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் மாவனெல்ல, ஹிங்குல பகுதியில் கைதாகிய 24 வயது இப்ராஹிம் ஷஹீடா ஆகிய பெண் சந்தேக நபரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகிறது.

இவர் ஸஹ்ரான் நடத்திய இரகசிய முகாமில் கலந்து கொண்டிருந்தார். நடத்தப்பட்ட விசாரணையில் குறித்த முகாமில் மேலும் 15 பெண்கள் கலந்து கொண்டிருந்தனர் என்றும், அவர்கள் தற்கொலை தாக்குதலை 

நடத்த முன் வழங்கும் உறுதி மொழியை வழங்கினார்கள் என்றும் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு