பொதுமக்கள் நிறைந்த வீதியில் மனைவி மீது 35 தடவைகள் கத்தியால் குத்திய கணவன் கைது..!

ஆசிரியர் - Editor I
பொதுமக்கள் நிறைந்த வீதியில் மனைவி மீது 35 தடவைகள் கத்தியால் குத்திய கணவன் கைது..!

குடும்ப தகராறினால் மனைவியை 35 தடவைகள் வெட்டி காயப்படுத்திய கணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

குறித்த சம்பவம் திருகோணமலை - கந்தளாய் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.

மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த தனது மனைவியை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த கணவன் வழி மறித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து வாய்த்தர்க்கத்தில் இருவரும் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர் திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்த கூரிய ஆயுதத்தை எடுத்து 

தனது மனைவியை சரமாரியாக 35 தடவைகள் வெட்டியும், குத்தியும் படுகாயம் ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தாக்குதலை நடத்திய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு