யாழ்.நகரில் உள்ள டயலொக் நிறுவன பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி..! அலுவலகம் தற்காலிக முடக்கலில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் உள்ள டயலொக் நிறுவன பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி..! அலுவலகம் தற்காலிக முடக்கலில்..

யாழ்.நகரில் உள்ள டயலொக் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள டயலொக் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் பணியாற்றுபவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை நேற்று (20) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அதனால் அந்த நிறுவன அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது. அந்த நிறுவனத்தினால் யாழ்ப்பாணம் வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் பணியாற்றுபவர்களுக்கு 

கொழும்பு தனியார் வைத்தியசாலை ஊடாக பிரிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டன. அதன் முடிவே நேற்று அனுப்பப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு