பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவர் உட்பட வடமாகாணத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவர் உட்பட வடமாகாணத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 442 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் வடமாகாணத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

குறித்த இருவரில் ஒருவர் மன்னார் பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

குறித்த நபர் ஆடை தொழிற்சாலை ஊழியர் என தொியவந்துள்ளது. மற்றய நபர் கிளிநொச்சி- வலைப்பாடு பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் நேரடியான தொடர்புகளை பேணியவர் என கண்டறியப்பட்டுள்ளதாக 

மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு