யாழ்.மாவட்டத்தில் தீவு பகுதிகளை சீனாவுக்கு வழங்கும் திட்டம்..! மண்டையை பிய்த்துக் கொள்ளும் அரசு, மேலதிக ஆய்வில் அமைச்சரவை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தீவு பகுதிகளை சீனாவுக்கு வழங்கும் திட்டம்..! மண்டையை பிய்த்துக் கொள்ளும் அரசு, மேலதிக ஆய்வில் அமைச்சரவை..

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகிய தீவுகளில் மேற்கொள்ளப்படவுள்ள புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டம் குறித்து அமைச்சரவை மேலதிக ஆய்வுகளை மேற்கொள்வதாக ஆங்கில ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது, 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன், புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மூலமான மின் உற்பத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.குறித்த மின் உற்பத்தி திட்டத்திற்காக சீனா தெரிவு செய்யப்பட்டமைக்கு, 

இந்தியா எதிர்ப்பு வெளியிட்டதாக கூறப்படும் நிலையில், அமைச்சரவை மேலதிக ஆய்வுகளை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.அதாவது, சர்வதேச ரீதியான ஏல விற்பனை நடைமுறைகளுக்குப் பின்னரே சீன நிறுவனமொன்றுக்கு 

குறித்த புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டம் வழங்கப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, குறித்த மின் உற்பத்திக்கு 

டீசல் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையினால் செலவினம் மிக அதிகமாக காணப்படுகின்றது.ஆகவேதான் மின் உற்பத்தி திட்டங்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, 

இலங்கையின் வட.பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள குறித்த மின் உற்பத்தி திட்டங்கள் தொடர்பில் அமைச்சரவை மேலதிக ஆய்வுகளை முன்னெடுத்துள்ளது.இந்த திட்டத்தை இரத்து செய்வதற்கான தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

என அவர் குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு