யாழ்.மாவட்டம் முடக்கப்படுமா..? மக்களின் கைகளிலேயே அது உள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் விளக்கம்..!

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டம் மீண்டும் முடக்கப்படாமல் இருப்பதற்கு மக்களின் பூரணமான ஒத்துழைப்பு அவசியம். என யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

மாவட்டத்தின் தற்போதைய நிலை தொர்பாக ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

யாழ்.மாவட்டத்தில் தற்போது சுமார் 610 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர். மாவட்டம் மீண்டும் முடக்கப்படாமலிருப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம், 

மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நேற்றய தினமும் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மாவட்டத்தில் 213 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். தற்போதுவரை 190 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் தற்போது, 

258 குடும்பங்களை சேர்ந்த 610 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக மாவட்ட செயலர் கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு