யாழ்.காரைநகரில் மக்களின் காணிகளை கபளீகரம் செய்யும் முயற்சி முறியடிக்கப்பட்டது..! தீவகத்தில் காணி கபளீகர முயற்சி தீவிரம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.காரைநகர் - நீலங்காடு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக பொதுமக்களுக்கு சொந்தமான சுமார் 50 ஏக்கர் காணியை சுவீகரிப்பிற்காக அளவீடு செய்யும் நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் தலையீட்டால் நிறுத்தப்பட்டுள்ளது. 

காணி உரிமையாளர்கள், அரசியவாதிகள் இணைந்து கணியை அளக்க வந்த நில அளவை திணைக்கள அதிகாரிகளை வளிமறித்து போராட்டம் நடத்தியே காணி சுவீகரிப்பு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

குறித்த பகுதியில் ஜே.45 பிரிவுக்கு உட்பட்ட 67 பேருக்கு சொந்தமான 50 ஏக்கர் காணிகளை கடற்படை தமது தேவைகளுக்காக சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் படி குறித்த காணிகளை அளவிடும் பணிகளுக்காக நில அளவை திணைக்களத்தினர் 

வருகை தந்த போது அங்கு ஒன்று கூடியவர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்பட்டுத்தினர். இதனை அடுத்து நில அளவை திணைக்களத்தினர் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு