அதிக பட்சமாக 16.25 கோடிக்கு ஏலம்!! -கிறிஸ் மோரிஸை வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்-

ஆசிரியர் - Editor II

எவரும் எதிர்பார்க்காத வகையில் தென்ஆப்பிரிக்காவின் சகலதுறை ஆட்டக்காரரான  கிறிஸ் மோரிஸ் 16.25 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல் ஏலம் இன்று வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்றது. முதற்கட்ட இடைவேளைக்கு முன் இறுதி வீரராக தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் மோரிஸ் ஏலம் விடப்பட்டார்.

இவரை ஏலம் எடுக்க பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விருப்பம் காட்டின. இதனால் ஏலம் தொடங்கிய சிறிது நேரத்தில் தொகை 10 கோடியை தாண்டியது. 10 கோடி ரூபாயை தாண்டியதும் மும்பை இந்தியன்ஸ் பின் வாங்கியது.

ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மோதின. கிங்ஸ் பஞ்சாப் விடாமல் 16 கோடி ரூபாய் வரை கேட்டது. இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 16.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

33 வயதான கிறிஸ் மோரிஸ் இவ்வாறு பெரும் தொலை பணத்திற்கு ஏலம் எடுக்கப்படுவார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு