யாழ்.பருத்துறையில் இளைஞன் கைது..! பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை போராட்டத்தில் கலந்து கொண்டதாக பொலிஸார் குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I

தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் நடைபெற்ற சாத்வீக வழி போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவன் பருத்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

போராட்டத்தில் குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளுடன் கலந்து கொண்டிருந்த நிலையில் இலக்கத்தை வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் பருத்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், 

வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. கைது செய்யப்பட்ட இளைஞன் பருத்துறை பகுதியை சேர்ந்த 26 வயதானவர் என கூறப்படுவதுடன், பொலிஸ் நிலையம் முன்பாக இளைஞனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நின்றுகொண்டிருக்கின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு