நாளை ஐ.பி.எல் வீரர்களுக்கு நாளை ஏலம்!! -8 அணிகள் 56 வீரர்களை எடுப்பதற்கு 130 கோடி ஒதுக்கீடு-

ஆசிரியர் - Editor II
நாளை ஐ.பி.எல் வீரர்களுக்கு நாளை ஏலம்!! -8 அணிகள் 56 வீரர்களை எடுப்பதற்கு 130 கோடி ஒதுக்கீடு-

ஐ.பி.எல் 2021 போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் 292 வீரர்கள் ஒவ்வொரு அணிகளுக்கான பகிர்தெடுக்கப்படவுள்ளனர். 

இந்த வருடம் நடைபெறும் ஏலம் மெகா ஏலம் இல்லை என்றாலும், 292 வீரர்கள் ஏலம் விடப்படுகிறார்கள். இதில் 164 பேர் இந்திய வீரர்கள் ஆவார்கள்.

மொத்தம் 1114 வீரர்கள் பதிவு செய்ததில் 292 பேர் இடம் பிடித்துள்ளனர். நாளை செவ்வாய்க்கிழமை சென்னையில் மதியம் 3 மணிக்கு ஏலம் ஆரம்பமாக உள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வீரர்களை ஏலம் எடுக்கலாம். இதில் ஒருவர் வெளிநாட்டு வீரராக இருக்கலாம். கைவசம் 19.90 கோடி ரூபாய் வைத்துள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 வீரர்களை ஏலம் எடுக்கலாம். இதில் 3 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். கைவசம் 13.4 கோடி ரூபாய் வைத்துள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் (தற்போது பஞ்சாப் கிங்ஸ் என பெயர் மாற்றம்) 9 வீரர்களை ஏலம் எடுக்கலாம். இதில் 5 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். கைவசம் 53.20 கோடி ரூபாய் வைத்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 வீரர்களை ஏலம் எடுக்கலாம். இதில் 2 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். 10.75 கோடி ரூபாய் கைவசம் வைத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் 7 வீரர்களை ஏலம் எடுக்கலாம். இதில் 4 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். கைவசம் 15.35 கோடி ரூபாய் வைத்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் 9 வீரர்களை ஏலம் எடுக்கலாம். இதில் 3 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். கைவசம் 37.85 கோடி ரூபாய் வைத்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 11 வீரர்களை ஏலம் எடுக்கலாம். இதில் 3 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். கைவசம் 35.40 கோடி ரூபாய் வைத்துள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் 3 வீரர்களை ஏலம் எடுக்கலாம். இதில் ஒரு வெளிநாட்டு வீரர் அடங்குவார். கைவசம் 10.75 கோடி ரூபாய் வைத்துள்ளது. வீரர்கள் எலம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு