பூநகரி பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் யாழ்.சாவகச்சோியை சேர்ந்த ஆசிரியை உட்பட வடக்கில் இன்று 5 பேருக்கு தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழகம் ஆகியவற்றில் இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் வடமாகாணத்தில் 5 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார். 

இதன்படி தொற்றுக்குள்ளான 5 போில் 3 பேர் கிளிநொச்சி ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் எனவும் மிகுதி இருவர் யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் நடத்தப்பட்ட எழுமாற்று பரிசோதனையில் தொற்றுக்குள்ளானவர்களாகவர். ஒருவர் யாழ்.சாவகச்சோி பகுதியை சேர்ந்த ஆசிரியை இவர் பூநகரி பகுதியில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கிறார். 

மற்றய நபர் மன்னார் பகுதியை சேர்ந்தவர் எனவும் பணிப்பாளர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு