யாழ்.மாவட்டத்திலுள்ள 3 தீவுகள் சீனாவுக்கே..! முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்கிறார் அமைச்சர்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்திற்கு சொந்தமான 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை. என அமைச்சரவை இணை பேச்சாளர் உதய கம்மன்பில கூறியுள்ளார். 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். 

இதன்போ மேலும் அவர் கூறுகையில், யாழ்ப்பாணத்தில் 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் தீர்மானத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. 

விலைமனு கோரல் மூலமாக சீன நிறுவனத்திற்கு அதனை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருப்பதாக அமைச்சர் கூறியிருக்கின்றார். 

அந்த அமைச்சரவை தீர்மானத்தை தாமதப்படுத்துவதாகவோ அல்லது இரத்துச் செய்வதாகவோ மின்சக்தி அமைச்சர் அமைச்சரவைக்கு அறிவிக்காதமையால் 

அந்த தீர்மானம் தொடர்ந்தும் வலுவில் உள்ளது என்பதாகவே நினைப்பதாக அவர் குறிப்பிட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு