பாலுாட்டும் தாய்மார், கர்ப்பவதி பெண்கள் தவிர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி..! மார்ச் 1ம் திகதி வடமாகாணம் முழுவதும் பணி ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I

வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் கொவிட்-19 தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கும் பணி எதிர்வரும் 1ம் திகதி ஆரம்பமாகும். என மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

வடமாகாணம் முழுவதும் 108 தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு முன்னாயத்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

5 மாவட்டங்களிலும் தடுப்பூசி பெறவுள்ளவர்களுக்கான பட்டியல் தயாரிக்கும் பணி பிரதேச செயலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலின் பிரகாரம் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. 

எதிர்வரும் மார்ச் மாதம் 1ம் திகதி இந்த பணிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், மக்கள் யாரும் அச்சமடையவேண்டிய அவசியமில்லை. மாகாணத்தில் 85 வீதத்திற்கும் அதிகமான சுகாதார துறையினர் தடுப்பூசிகளை ஏற்றியுள்ளனர். 

அவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் விசேடமாக பாலுாட்டும் தாய்மார், கர்ப்பவதி பெண்கள் தவிர்ந்த சகலரும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம். எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்னார். 

 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு