யாழ்.உடுப்பிட்டி - இமயாணன் பகுதிக்கு கொழும்பிலிருந்து வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பிண பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

உடுப்பிட்டி இமயாணனைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே இவ்வாறு தொற்றுள்ளமை நேற்றிரவு கொழும்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. 

என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். கொழும்பில் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் அவர் 

பி.சி.ஆர் மாதிரிகளை வழங்கிவிட்டு கடந்த சில தினங்களுக்கு முன் தனது உடுப்பிட்டி இமயாணனின் உள்ள வீட்டடிற்குத் திரும்பியுள்ளார்.

அவரது பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை நேற்று கிடைக்கப்பெற்றுள்ள நிலையிலேயே, அவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ந்நிலையில், வடமாகாணத்துக்கு வெளியே தங்கியுள்ளவர்கள் பி.சி.ஆர் மாதிரிகளை வழங்கிவிட்டு இங்கு வருவதைத் தவிர்க்கவேண்டும் எனவும், 

 அவசர தேவையால் வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்தால், சுகாதார மருத்துவ அதிகாரிக்கு தகவலை வழங்கி சுயதனிமைப்படுத்தல் விதிகளை மதித்து 

வெளியில் நடமாடுவதைத் தவிர்க்கவேண்டும் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு