மணல் அகழ்வு பிரச்சினை..! A-9 வீதியில் வாள்களுடன் மணல் மாபியாக்கள் மோதல், ஒருவர் கொலை, 3 பேர் ஆபத்தான நிலையில்..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் மணல் அகழ்வு விடயத்தில் இரு குழுக்களுக்கிடையில் உருவான தர்க்கம் மோதலில் முடிந்த நிலையில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 3 பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் ஏ-9 பிரதான வீதியில் உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. மணல் அகழ்வு விடயத்தை பொலிஸாருக்கு தொிவித்த சம்பவம் ஒன்றினை அடிப்படையாக கொண்டு இரு குழுக்களுக்கிடையில் வாள்கள் மற்றும் 

தடிகள், கம்பிகளுடன் இன்று காலை மோதல் ஏற்பட்டிருக்கின்றது, சம்பவத்தில் 4 பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏனைய 3 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் சிலர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதுடன், மேலும் சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு