அமைச்சர் டக்ளஸின் காட்டமான கடிதம்..! அரசியல் அழுத்ததினால் இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரி தான் விரும்பிய இடத்தில் பணியில் இணைந்தார்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்திலிருந்து அரசியல் பின்புலத்தினால் இடமாற்றம் செய்யப்பட்ட முன்னாள் வேலணை பிரதேச செயலர் சோதிநாதன் அமைச்சர் டக்ளஸின் தலையீட்டினால் தனது விருப்பத்திற்கமைய வடமாகாணசபை நிர்வாகத்தில் இணைந்துள்ளார். 

வேலணைப் பிரதேச செயலாளராக பணியாற்றிய சோதிநாதனிற்கு கடந்த 2021-01-25 மாலையில் அவசர இடமாற்றக் கடிதம் மூலம் 26ஆம் திகதி முதல் செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு  இடமாற்றப்பட்டார். இவ்வாறு நிர்வாக சேவை அதிகாரி 

எந்தவொரு முன் அறிவித்தலோ ஒப்புதலோ இன்றி இடமாற்றப்பட்டமை அரசியல் நோக்கம் கொண்டது எனவும் கடும் விசனம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. 

இதற்கு உரிய தீர்வு கிடைக்கும் எனத் திரிவிக்கப்பட்டதோடு இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் சமல் ராயபக்சாவிற்கும் காட்டமான கடிதம் ஒன்றை எழுதி குறித்த இடமாற்றம் இரத்துச் செய்யப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

தனது விடயம் தொடர்பாக அமைச்சை நாடிய குறித்த உத்தியோகத்தர் வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றம் வழங்குமாறு விடுத்த கோரிக்கையின் பெயரில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10ம் திகதி வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் ஒப்பமிட்டு 

பணியை பொறுப்பேற்றுக்கொண்டார். இதன் பிரகாரம் கடந்த இரு வாரமாக நிலவிய சர்சையின் பின்னணியில் முயற்சித்தாக கருதப்பட்ட இருவரின் சிபார்சும் நிராகரிக்கப்பட்டு மூன்றாவதான இடைத்தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு