நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வருடாந்த ஒதுக்கீட்டில் 7 மில்லியன் ரூபாவை வடமாகாணத்திற்கு ஒதுக்கிய சுரேன் ராகவன்..!

ஆசிரியர் - Editor I

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வருடாந்த ஒதுக்கீட்டில் சுமார் 7 மில்லியன் ரூபாயை மாகாண மக்களின் அபிவிருத்திக்காக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் வழங்கியுள்ளார். 

இந்த 7 மில்லியன் ரூபாவில் போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 5.5 மில்லியன் ரூபாவும் வவுனியா மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு தலா 5 இலட்சம் ரூபாவும் ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

 இந்நிதியானது, இளைஞர்கள், பெண்தலைமைத்துவக் குடும்பங்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு அவர்களுடைய தேவைகளுக்கு ஏற்ப செயற்திட்டங்களுடாக பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் ஆராய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் இராகவனின் அலுவல உத்தியோகத்தர்கள் கடந்த வாரம் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறுபட்ட தரப்பினரை சந்தித்துள்ளதோடு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கும் 

விஜயம் மேற்கொண்டு இந்த நிதியினை பகிர்ந்தளிப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு