யாழ்.கொரோனா சமூக தொற்றா..? அச்சுவேலி மரக்கறி சந்தை வியாபாரிகள் 4 பேருக்கு தொற்று உறுதி, பேருந்து நடத்துனரின் மனைவி, பிள்ளைக்கும் தொற்று..

ஆசிரியர் - Editor I

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடம் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இதன்படி யாழ்.அச்சுவேலி மரக்கறி சந்தையில் வியாபாரிகளுக்கு எழுமாற்றாக செய்யப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதேபோல் நேற்றய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 

பேருந்து நடத்துனரின் மனைவி மற்றும் பிள்ளைக்கும் கொரோனா தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. மேலும் மன்னார் மாவட்டத்தில் 5 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு