வடமாகாணத்திலும் புதியவகை கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் இனங்காணப்பட்டார்..! நாட்டில் 4 பகுதிகளில் புதிய வைரஸ் தொற்று..

ஆசிரியர் - Editor I

வடமாகாணத்தின் ஒரு மாவட்டம் உள்ளிட்ட 4 பகுதிகளில் திரிபுபட்ட புதியவகை கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளது. 

கொழும்பு, அவிசாவளை, வவுனியா, பியகம பகுதிகளிலேயே இவ்வாறு புதியவகை கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டிருக்கின்றது. 

குறித்த பகுதிகளில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இவ்விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக 

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்தியர் சந்திம ஜீவந்தர குறிப்பிட்டார்.நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்களிடம் பெறப்பட்ட 

92 மாதிரிகளைக் கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு