அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு முடிந்தால் நடவடிக்கை எடுக்கட்டும்..! நீதிமன்றில் சந்திக்க தயார்..

ஆசிரியர் - Editor I

அமைச்சர் சரத் வீரசேகர என் மீது நடவடிக்கை எடுப்பதாயின் நிச்சயமாக எடுக்கலாம். எடுக்கட்டும். அதனை நீதிமன்றில் எதிர்கொள்ள தயார். என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியிருக்கின்றார். 

விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே 

விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,அவர் சட்ட நடவடிக்கை எடுத்தால் நான் அதை வரவேற்கின்றேன். காரணம் எங்களுடைய பிரச்சினைகளை நாங்கள் வெளியில் கொண்டுவரக்கூடிய ஒரு சந்தர்ப்பம் எங்களுக்கு ஏற்படும். 

ஏன் என்றால் நான் இதுவரையில் எடுத்திருக்கும் அத்தனை நடவடிக்கைகளும் ஜனநாயகத்திற்கு உட்பட்ட நடவடிக்கைகளே, வெறுமனே தாங்கள் நினைத்தது போன்று எங்களை குற்றம் சாட்ட முடியாது. சட்ட நடவடிக்கை கட்டாயமாக எடுக்கட்டும் 

நீதிமன்றத்திலே அவற்றை சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு