வடமாகாணம் முழுவதும் கொவிட் -19 தடுப்பூசி வழங்குவதற்கான ஏற்பாடுகள் துரிதம்..! 118 நிலையங்கள் அமைப்பு..

ஆசிரியர் - Editor I

கொவிட் -19 தடுப்பூசி வழங்குவதற்காக வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் சுமார் 118 தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,வடக்கு மாகாணத்தில் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. 

அவர்களில் 85 சதவீமான உத்தியோகத்தர்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். வடக்கில் மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்குவதற்கு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனர்.

அதேவேளை, 30 தொடக்கம் 60 வயது வரையானோருக்கு தடுப்பூசி முதற்கட்டமாக வழங்கப்படுவதுடன், அவர்கள் குறித்த பெயர் விபரங்கள் பிரதேச செயலாளர்கள் ஊடாக சேகரிக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி போடுவதற்கு மக்களை பிரதேச செயலக ஊழியர்களே ஒழுங்குபடுத்தி அழைத்துவருவர். வடக்கில் தடுப்பூசி போடுவதற்காக 118 நிலையங்கள் அமைக்கப்பட்டுவருவதாகவும், 

தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்ற உடனடியாகவே மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கிவிடும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு