6 வயது குழந்தைக்கு கரண்டியை சூடு காட்டி முகம் முழுவதும் சூடு வைத்த சிறிய தந்தை கைது..!

ஆசிரியர் - Editor I
6 வயது குழந்தைக்கு கரண்டியை சூடு காட்டி முகம் முழுவதும் சூடு வைத்த சிறிய தந்தை கைது..!

6 வயதான குழந்தைக்கு முகம் முழுவதும் சூடு வைத்த சிறிய தந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றினால் 19ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றார். 

தனது மனைவியின் முதல் கணவரது 6 வயது சிறுமியின் முகத்தில் கரண்டியை சூடு ஏற்றி சூடுவைத்த அடையாளங்கள் இருந்த நிலையில் 25 வயதுடைய சிறிய தந்தையாரை பொலிசார் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்ததுடன் 

பாதிக்கப்பட்ட சிறுமயை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவரை நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னைலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது 

அவரை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு