சுமந்திரனுக்கான STF பாதுகாப்பை நானே நீக்கினேன்..! அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை..

ஆசிரியர் - Editor I

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்பை நானே நீக்கினேன் என பொது பாதுகாப்புதுறை அமைச்சர் சரத் வீரசேகர தெவித்துள்ளார்.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி விசேட அதிரடிப் படை பாதுகாப்பை பெற்றுக்கொண்ட சுமந்திரன், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையிலேயே அவருக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டதாக்க சரத் வீரசேகர தெவித்தார்.

சிங்கள தொலைக்காட்சி சேவை ஒன்றில் இடம்பெற்ற விசேட செவ்வியில் கருத்து தெவிக்கும்போதே பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இதனைத் தெவித்துள்ளார்.

மேலும் உண்மையாகவே சுமந்திரனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்திருந்தால், அவர் ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்க மாட்டார் என்றும் அவர் கூறினார். 

இருப்பினும் சுமந்திரனுக்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்படும் என்றும் சரத் வீரசேகர தெவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு