இந்தியாவை துவசம் செய்த இங்கிலாந்து!! -முதல் டெஸ்ட்டை 227 ஓட்டங்களால் வென்றது-

ஆசிரியர் - Editor II
இந்தியாவை துவசம் செய்த இங்கிலாந்து!! -முதல் டெஸ்ட்டை 227 ஓட்டங்களால் வென்றது-

சென்னையில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்தது. இதில் நாணயசுழல்ச்சியில் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 578 ஓட்டங்கள் குவித்து ஆட்டம் இழந்தது. 

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3 ஆவது நாள் ஆட்டம் முடிவில் 74 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 257 ஓட்டங்கள்  எடுத்து இருந்தது. இதன் பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்சில் 337 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 

இந்நிலையில் 241 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி, வேகமாக ஓட்டம் குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அதிரடியாக அடித்து ஆடியது. இதன்படி 46.3 ஓவர்களில் 178 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 

இதனையடுத்து 420 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 13 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 39 ஓட்டங்களை எடுத்தது. 

இன்று செவ்வாய்க்கிழமை 5 ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் 381 ஓட்டங்கள் என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, 192 ஓட்டங்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதன் மூலம் 227 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு