யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட முடிவுகள் வெளியானது..! 14 பேருக்கு தொற்ற உறுதி, வடக்கில் 6 பேருக்கு தொற்று..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் 765 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் வடமாகாணத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை வெளியிட்டிருக்கின்றது. இதன்படி வடமாகாணத்தில் 6 போருக்கும் தனிமைப்படுத்தல் மையங்களை சேர்ந்த எட்டுப் பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது . 

மொத்தமாக 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டம் - 3, வவுனியா மாவட்டம் - 3, முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையம் - 1, முழங்காவில் தனிமைப்படுத்தல் மையம்-7

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு