நீதிமன்ற தடை உத்தரவை மீறியதாக சுமந்திரன், சாணக்கியன், மணிவண்ணன் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக பருத்துறை நீதிமன்றில் B அறிக்கை தாக்கல்..

ஆசிரியர் - Editor I

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான சாத்வீக போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் யாழ்.மாநகர முதல்வர், சட்டத்தரணிகள் மீது பருத்துறை நீதிமன்றில் 3 பொலிஸ் நிலையங்களால் B அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக பேரணிக்கு தடைகோரி ஏ ஆர் அறிக்கையூடாக பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையங்களால் தொடரப்பட்ட வழக்கிற்கு நீதிமன்று வழங்கிய தடை உத்தரவு மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தே, 

இந்த அறிக்கைகள் பேரணியில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றக் கட்டளைச் சட்டம் 55 (1), 56 2 (ஆ) ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த அறிக்கைகளை பருத்தித்துறை, 

நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் தனித்தனியே தாக்கல் செய்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், சட்டத்தரணி கே.சுகாஷ், 

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு எதிராகவே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு