கிளிநொச்சி ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் சிலருக்கு கொரோனா..! தொடர்ந்து பணியாளர்களை பணிக்கு அழைப்பதாக பணியாளர்கள் குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சியில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், 

குறித்த ஆடை தொழிற்சாலை நிர்வாகம் ஊழியர்களை தொடர்ந்தும் கடமைக்கு அழைப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. 

ஊழியர்கள் இன்று கடமைக்கு சென்ற நிலையில் அவர்கள் தமது அச்சத்தினை தமது அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். 

இருப்பினும் அதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளாத குறித்த ஆடைத்தொழிற்சாலையின் நிர்வாகம் தொடர்ந்தும் சேவையாற்றுமாறு வற்புறுத்தியுள்ளனர். 

இதனால் அங்கு அமைதி இன்மை ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக அங்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் 

அறிவுரைகளை வழங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது. இந்த நிலையில் குறித்த ஆடைத்தொழிற்கசாலையில் பல்வேறு பிரதேசங்களிலிருந்து 

பலரும் தொழிலின் நிமித்தம் செல்கின்றனர். இதனால் மாவட்டத்தின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு தொழிற்சாலை நிர்வாகம் 

பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்ற கோரிக்கை பொது அமைப்புக்களால் மன்வைக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை குறித்த ஆடைத் தொழிற்சாலைக்கு வெளி மாவட்டங்களிலிருந்து உயர் பதவிநிலை ஊழியர்கள் வருகை தருவதால் ஆபத்தான நிலை காணப்படுவதாகவும் 

பொது அமைப்புக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது. அதற்கு அமைவாக சம்மந்தப்பட்டவர்களு்ம, சுகாதார துறையினரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் 

என கோரிக்கை முன்வைக்கப்பட்டள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு