யாழ்.கோண்டாவிலில் வீடுடைத்து புகுந்த கள்ளர்கள் வீட்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொள்ளை..! 24 மணித்தியாலத்திற்குள் மடக்கியது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I

யாழ்.கோண்டாவில் பகுதியில் வீடு உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் 24 மணித்தியாலத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள், நகைகளும் மீட்கப்பட்டுள்ளது. 

கோண்டாவில் - செபஸ்ரியன் விதியில் உள்ள வீடொன்றை நேற்று அதிகாலை உடைத்து உள்நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிருந்தவரை அடித்து காயப்படுத்திவிட்டு சுமார் 6 பவுண் தாலிக் கொடிணை பறித்து சென்றுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் 24 மணித்தியாலத்திற்குள் 3 கொள்ளையர்களை கைது செய்ததுடன்,கொள்ளையடிக்கப்பட்ட 6 பவுண் தங்க சங்கிலியை மீட்டிருக்கின்றனர். 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு