யாழ்.அரியாலையில் கடுகதி புகைரதம் மோதியதில் குடும்பஸ்த்தர் சம்பவ இடத்திலேயே பலி..!
யாழ்.அரியாலை - நாவலடி பகுதியில் ரயிலில் கடுகதி ரயில் மோதியிதில் குடும்பஸ்த்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்களிலில் பயணித்த அவர் ரயில் பாதுகாப்பற்ற கடவையை கடக்க முற்பட்ட போது,
தொடருந்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகினார் என்று தெரிவிக்கப்பட்டது. உடுவிலைச் சேர்ந்த விஸ்வநாதன் பாலரூபன் வயது-42 என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.