பீதியில் அரச ஒத்தோடிகள்..! பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான போராட்டத்திற்கு எதிராக சுவரொட்டிகள்...

ஆசிரியர் - Editor I

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை நடக்கும் தமிழர் உரிமைக்கான சாத்வீக வழி போராட்டம் இன்று யாழ்.மாவட்டத்தை அடையும் நிலையில் யாழ்.நகரில் அரச ஒத்தோடிகள் போராட்டத்திற்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

யாழ்.மாவட்டத்திற்கு கொரோனா தொற்றை இந்த போராட்டம் கொண்டுவரும் எனவும், தமிழ்தேசிய கூட்டமைப்பு, தமிழ்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றை சுட்டி இந்த பதாகைகள் எழுதப்பட்டுள்ளது.

பாரிய மக்கள் எழுச்சியை கண்டு யாழ்.மாவட்டத்தில் அரசில் கட்சி ஒன்றின் பின்னணியில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடைய பின்னணியில் தமிழர் உரிமையை வலியுறுத்தும் போராட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் கூச்சல்கள் போடப்பட்ட நிலையில்,

தற்போது இந்த பதாகைகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு