வவுனியா மாவட்டத்தில் இதுவரை 20 பொலிஸாருக்கு கொரோனா தொற்று..! இன்று 3 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I

வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் 20 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கின்றது. இன்று மட்டும் 3 பொலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

பயங்கரவாத தடுப்புபிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என 20 ற்கும் மேற்ப்பட்டோருக்கு கொரோனா தொற்றிருக்கின்றமை அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து வவுனியாவில் கடமையாற்றும் பல பொலிஸ் உத்தியோகத்தர்களிற்கு பி.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டிருந்தது. அவை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (06.02.2021) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அவர்களில் மேலும் 03 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு