கிளிநொச்சியை வந்தடைந்தது தமிழர் உரிமைக்கான சாத்வீக வழி போராட்டம்..! நாளை யாழ்ப்பாணம் நோக்கி நகரும்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியை வந்தடைந்தது தமிழர் உரிமைக்கான சாத்வீக வழி போராட்டம்..! நாளை யாழ்ப்பாணம் நோக்கி நகரும்..

“பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை” சாத்வீக போராட்டம் கிளிநொச்சியை வந்தடைந்துள்ளது. 

பேரணி டிப்போ சந்தியிலிருந்து நாளை காலை யாழ்ப்பாணம் பொலிகண்டியை நோக்கி நகரவுள்ளது.

கிளிநொச்சியை வந்தடைந்த குறித்த பேரணிக்கு கிளிநொச்சியில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. 

இரணைமடு சந்தியில் கூடிய ஆதரவாளர்கள் ஆமோக வரவேற்பளித்து பேரணியை வரவேற்றனர்.

தொடர்ந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டதத்தில் ஈடுபட்டுவரும் 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது போராட்டம் கைவிடப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு