அரசுக்கு ஆதரவாகவே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான சாத்வீக போராட்டம் நடக்கிறது..! டக்ளஸ் பிதற்றல்..

ஆசிரியர் - Editor I

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை தமிழர் உரிமையை வலியுறுத்தி நடைபெற்றுவரும் கவனயீர்ப்பு போராட்டம் அரசுக்கு சார்பானது. என கூறும் டக்ளஸ் தேவானந்தா, குறித்த போராட்டத்தினால் பயன் எதுவும் இல்லை. எனவும் கூறியுள்ளார். 

யாழ். மாவட்ட கடற்றொழில், நீர் வேளாண்மை தொடர்பாக யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளக் கூடிய வேலைத் திட்டங்கள் மற்றும் புரெவிப் புயல் காரணமாக கடற்றொழில் தரப்பினருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று 

இன்றையதினம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.கலந்துரையாடலின் நிறைவில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும்போதே 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்தகால போராட்டங்கள் ஏமாற்றத்தையும், அழிவுகளையும் கொடுத்ததால் தற்போது போராட்டங்களில் தங்களுக்கு தயக்கம் இருக்கு என ஒருவர் கூறியிருந்தார். 

இந்த போராட்டம் ஒரு சுயலாபம் கொண்டது இதனால் எதுவும் நடக்கப்போவது இல்லை என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு