பிரபாகரனையே நான் கொல்ல முயற்சிக்கவில்லை..! அரச அதிகாரிகளை பழிவாங்குவதா? டக்ளஸ் கூறுகிறார்..

ஆசிரியர் - Editor I

பிரபாகரனையே கொலை செய்வதற்கு நான் முயற்சித்ததில்லை. என கூறியிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளை பழிவாங்கும் எண்ணம் தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை. எனவும் தன்னோடு இணைத்து செயலாற்றவே தான் முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார். 

கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் குறித்த மீளாய்வு கூட்டம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றிருந்தது. இந்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போது யாழ்.மாவட்டத்தில் அரச அதிகாரிகளுக்கு நெருக்குவாரம் இருப்பதாக

வெளியாகும் கருத்துக்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதற்கு அவர் மேலும் பதிலளிக்கையில், யாழ்.மாவட்டத்தில் அரச அதிகாரிகளுக்கு நெருக்குவாரங்கள் உள்ளதை 

நானும் அறிந்திருக்கிறேன். ஆனால் நான் ஒருபோதும் அரச அதிகாரிகளை பழிவாங்கும் எண்ணத்துடன் நடந்து கொண்டதில்லை. மாறாக அவர்களையும் இணைத்து செயலாற்றுவதற்கே முயற்சித்திருக்கின்றேன். விசேடமாக சொன்னால் பிரபாகரனையே கொலை செய்ய

நான் முயற்சிக்கவில்லை என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு