ஐ.பி.எல் ஏலத்தில் 1,097 வீரர்கள்!! -இலங்கையில் 31 வீரர்கள் உள்ளடக்கம்-

ஆசிரியர் - Editor II
ஐ.பி.எல் ஏலத்தில் 1,097 வீரர்கள்!! -இலங்கையில் 31 வீரர்கள் உள்ளடக்கம்-

ஐ.பி.எல். ஏலத்தில் கலந்து கொள்ள 1,097 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் மேற்கிந்தியதீவுகள் அணியினை சேர்ந்த வீரர்கள் ஆவார்கள்.

14 ஆவது ஐ.பி.எல் எதிர்வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் ஆரம்பமாக உள்ளது. இதற்கிடையே, ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18 ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது.

ஐ.பி.எல் ஏலத்திற்கு 1,097 வீரர்கள்  பதிவு செய்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் மேற்கிந்தியதீவுகள் அணியினை சேர்ந்த வீரர்கள் ஆவார்கள். இதில் 814 இந்திய வீரர்களும் 283 வெளிநாட்டு வீரர்களும் பதிவுசெய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வீரர்களின் விபரங்கள் வருமாறு:- மேற்கிந்திய தீவுகள்- 56 வீரர்கள், அவுஸ்திரேலியா - 42 வீரர்கள், தென்னாப்பிரிக்கா- 38 வீரர்கள், இலங்கை -31 வீரர்கள், ஆப்கானிஸ்தான் -30 வீரர்கள், நியூசிலாந்து- 29 வீரர்கள், இங்கிலாந்து - 21 வீரர்கள், ஐக்கிய அரபு அமீரகம் -9 வீரர்கள், நேபாளம் - 8 வீரர்கள், ஸ்காட்லாந்து- 7 வீரர்கள், வங்காளதேசம் - 5 வீரர்கள், அயர்லாந்து - 2 வீரர்கள், அமெரிக்கா -  2 வீரர்கள், ஜிம்பாப்வே- 2 வீரர்கள், நெதர்லாந்து - 1 வீரர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு