SuperTopAds

தறிகெட்டு ஓடி வீதியால் சென்றவர் மீது மோதிவிட்டு தப்பி ஓடியவரை துரத்தி பிடித்த இளைஞர்கள்..! யாழ்.சுன்னாகத்தில் சம்பவம், இளைஞரின் கை சிதைவு..

ஆசிரியர் - Editor I

யாழ்.சுன்னாம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய டிப்பர் சாரதி இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மாலையில் மக்கள் நடமாட்டம் அதிகமான வீதியில் அலட்சியமாக டிப்பர் வாகனத்தை ஓட்டிய குறித்த நபர், 

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீது மோதியுள்ளார். சம்பவத்தையடுத்து டிப்பர் வாகன பின் சக்கரத்திற்குள் தவறி விழுந்த இளைஞனின் கை சிதைவடைந்துள்ளது. 

இந்நிலையில் டிப்பர் வாகன சாரதி அங்கிருந்து தப்பி ஓடியிருக்கின்றார். இதனையடுத்து துரத்தி சென்ற இளைஞர்கள் மருதனார்மடம் பகுதியில் வைத்து சாரதியை மடக்கி பிடித்ததுடன், 

பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் படுகாயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல அம்புலன்ஸ் வண்டியை அழைத்தபோதும் அம்புலன்ஸ் வரவில்லை. 

பின்னர் முச்சக்கர வண்டி ஒன்றில் காயமடைந்த இளைஞன் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார்.