சாவகச்சோி, மல்லாகம் நீதிமன்றங்களில் தடையுத்தரவு வழங்க மறுப்பு..! யாழ்.நீதிமன்றம் தடையை நீக்கியது, நகர்கிறது தமிழர் உரிமைக்கான சாத்வீக வழி போராட்டம்..

ஆசிரியர் - Editor I

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை அஹிம்சை வழி போராட்டத்தை தடுக்கும் வகையில் பொலிஸார் யாழ்.நீதிமன்றில் பெற்றிருந்த தடை உத்தரவு நீதிமன்றினால் நீக்கப்பட்டுள்ளது. 

பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு ஒருமுக விளக்கத்தில் வழங்கிய கட்டளையை பிரதிவாதிகள் முன்வைத்த ஆட்சேபனையை அடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நீக்கியது. 

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கு நேற்றுமுன்தினம் புதன்கிழமை தடை உத்தரவு வழங்கப்பட்டது. 

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், சட்டத்தரணி க.சுகாஷ், 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வேலன் சுவாமிகள், 

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரநிதிகள் உள்ளிட்டோருக்கு இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டது.

இதேவேளை சாவகச்சோி நீதிமன்றம் மற்றும் மல்லாகம் நீதிமன்றம் ஆகியன தடை உத்தரவு வழங்க மறுத்திருக்கின்றன. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு