காட்டுமிராண்டி தனமான தடைகளை தாண்டி நகர்கிறது தமிழர் உரிமைக்கான சாத்வீக வழி போராட்டம்..!

ஆசிரியர் - Editor I

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை தமிழர் உரிமைக்கான சாத்வீக போராட்டம் காட்டுமிராண்டி தனமான தடைகளையும் தாண்டி 3வது நாளாகவும் நகர்ந்து வருகிறது.

பேரணி பயணிக்கும் வீதிகளில் ஆணிகள்  எறியப்பட்டு, பேரணியில் பங்கேற்ற வாகனங்களின் ரயர்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக சிவில் சமூக பிரதிநிதிகள் பயணித்த வாகனம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன், சிறிதரன் பயணித்த வாகனம், மேலும் சில  வாகனங்களின் டயர்களே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளன என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புல்மோட்டையில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்துகொண்டிருந்தபோதே இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலங்கம் பயணித்த வாகனம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

அத்துடன் சில வாகனங்கள் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் கூறப்படுகின்றது. இதனால் முல்லைத்தீவிலுள்ள இளைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்களை அந்தப் பகுதிக்கு  விரையுமாறு  பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர்.

இதேவேளை தடைகள் அச்சுறுத்தல்களை தாண்டி போராட்டம் வெற்றிகரமாக நகர்ந்து வருகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு