இலங்கை அணியினருக்கு கொரோனா!! -மேற்கிந்திய தீவு சுற்றுப்பயணம் ரத்து-

ஆசிரியர் - Editor II

இலங்கை கிறிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், தணியின் வீரர் லஹிரு திரிமன்னே போன்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மேற்கிந்தியத் தீவுக்கான இலங்கை அணியின் சுற்றுப் பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 20 ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுக்கு செல்லவிருந்த இலங்கை அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 ரி-20 சர்வதேச போட்டிகளில் விளையாட திட்டமிட்டிருந்தது. .

இந்நிலையில் மேற்கிந்திய பயணத்துக்கு முன்னர் இலங்கை அணியில் இடம்பிடித்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டது. இதன்போதே மிக்கி ஆர்தர் மற்றும் லஹிரு திரிமன்னே ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து குறித்த இவர்களுடன் தொடர்புகளைப் பேணிய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த தொடரை மீண்டும் பொருத்தமான ஒரு நேரத்தில் நடத்துவது தொடர்பில் இரு அணி நிர்வாகங்களும் தற்போது பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு