சென்னை ஆரம்பமானது முதலாவது டெஸ்ட்!! -டொஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு-

ஆசிரியர் - Editor II

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நாணயசுழல்ச்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்நிலையில் முதலில் டெஸ்ட் தொடர் இன்று வெள்ளிக்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஆரம்பமாகியுள்ளது. 

இந்திய அணியின் சகல துறை விளையாட்டு வீரர் அக்சர் பட்டேல் போட்டியில் இருந்து விலகி உள்ளார். இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளர் சாபாஸ் நதீம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவலுக்கு பின் ஓராண்டு கழித்து இந்தியாவில் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுவாகும். கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு