வடக்கில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! கொரோனா தொற்றினால் உயிரிழந்தவருடன் தொடர்பில் இருந்த 5 பேர் மற்றும் இரு பொலிஸார்..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசலை மற்றும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகியவற்றில் நேற்று 667 பேருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்படி தகவலை மாகாண சுகாதார பணிப்பாளராகப் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி  மன்னார் முசலி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கடந்த வாரம் 

கொரோனா தொற்று நோயால் உயிரிழந்தவருடன் தொடர்புடைய 5 பேர் உட்பட மன்னார் மாவட்டத்தில் 6 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் தொற்றுக்குள்ளான இருவரும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு