இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்து கறுப்பு பட்டியுடன் போராட்டம்..! பொலிஸாரின் தடை உத்தரவை ஏற்க மறுத்த மக்கள்..

ஆசிரியர் - Editor I

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்து வடகிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்தக்கோரி இன்று காலை யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இன்று முற்பகல் 10 மணிக்கு போராட்டம் திட்டமிடப்பட்ட நிலையில் போராட்ட இடத்துக்கு வருகை தந்த யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றத் தடை உத்தரவை வாசித்துக் காண்பித்தனர். எனினும் நீதிமன்றக் கட்டளையில் 

பெயர் குறிப்பிடப்பட்ட எவரும் ஆர்ப்பாட்டத்தில் இல்லாமையால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பொலிஸாரின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்தனர். அதனால் போராட்டத்தைத் தடுக்க 

பொலிஸார் கடும் முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் உறவுகள் தமது போராட்டத்தை தொடர்கின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு