சம்பத் வங்கி ஊழியர் ஒருவர் உட்பட வடக்கில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! வங்கி கிளை மூடப்பட்டது..

ஆசிரியர் - Editor I

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் நேற்றய தினம் நடத்தப்பட்ட 667 பேருக்கான PCR பரிசோதனையில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் மன்னார் சம்பத் வங்கியில் பணியாற்றும் மாத்தறையைச் சேர்ந்த உத்தியோகத்தர் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மாத்தறையைச் சேர்ந்த குறித்த வங்கி உத்தியோகத்தர்  கொரோனா தொற்று அறிகுறிகளுடன் மன்னார் வைத்தியசாலையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார். அவருக்கு உடனடியாக முன்னெடுக்கப்பட்ட 

அன்டிஜன் பரிசோதனையில் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் நேற்று மீளவும் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் சம்பத் வங்கியின் மன்னார் கிளை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் மாத்தளையில் இருந்து வருகை தந்த ஒருவருக்கு கோரானா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 

ஆடைத் தொழிற்சாலை சாரதி ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் தொற்றாளர் ஒருவருடன் நேரத் தொடர்புடையவர்.

யாழ்ப்பாணம் வருகை தருவோருக்கு எழுதுமட்டுவாழ் வைத்து தடையில் முன்னெடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனையில் இருவருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு